என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் முதல் நாளில் பொதுமக்கள் 36 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்
Byமாலை மலர்3 March 2021 4:25 AM GMT (Updated: 3 March 2021 4:25 AM GMT)
புதுவையில் முதல் நாளில் பொதுமக்கள் 36 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் போடப்பட்டு வருகிறது. இதற்காக 13 மையங்கள் தயார் செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.
முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
முதல் நாளான நேற்று முன்தினம் 36 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதேநேரத்தில் இதுவரை சுகாதார பணியாளர்கள் 9 ஆயிரத்து 668 பேர், முன்கள பணியாளர்கள் 293 பேர், பொதுமக்கள் 36 பேர் என 10 ஆயிரத்து 701 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,485 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 29 பேருக்கு தொற்று உறுதியானது. 32 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 39 ஆயிரத்து 763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 79 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 95 பேர் வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் உயிரிழப்பு 1.68 சதவீதமாகவும், குணமடைவது 97.88 சதவீதமாகவும் உள்ளது.
புதுவையில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் போடப்பட்டு வருகிறது. இதற்காக 13 மையங்கள் தயார் செய்யப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.
முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
முதல் நாளான நேற்று முன்தினம் 36 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதேநேரத்தில் இதுவரை சுகாதார பணியாளர்கள் 9 ஆயிரத்து 668 பேர், முன்கள பணியாளர்கள் 293 பேர், பொதுமக்கள் 36 பேர் என 10 ஆயிரத்து 701 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,485 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 29 பேருக்கு தொற்று உறுதியானது. 32 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 39 ஆயிரத்து 763 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 79 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 95 பேர் வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் உயிரிழப்பு 1.68 சதவீதமாகவும், குணமடைவது 97.88 சதவீதமாகவும் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X