என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோடு மாவட்டத்தில் 2-ம் கட்டமாக முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
Byமாலை மலர்2 March 2021 2:46 AM GMT (Updated: 2 March 2021 2:46 AM GMT)
ஈரோடு மாவட்டத்தில் 2-ம் கட்டமாக முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
ஈரோடு:
கொரோனா வைரசை கட்டுப்படுத்த இந்தியாவில் முதல் கட்டமாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதல் கட்டமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 5 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.
அதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், போலீசார், பிற துறையில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தடுப்பூசி போடும் முதியவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் எனவும், அப்படி இல்லை என்றால் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை உட்பட ஆவணங்களை காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் சுகாதார துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறையினர் செய்துவந்தனர். இதேபோல் 45 வயதுக்கு மேற்பட்ட 59 வயதுக்கு உட்பட்ட இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 24 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 42 தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயது முதல் 59 வயது வரை உள்ள இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு சரியாக உள்ளதா என்பதை பார்த்த பின்னரே தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்கள் ½ மணி நேரம் கண்காணிப்பில் இருந்தனர்.
24 அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாகவும், 42 தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணம் வசூ லிக்கப்பட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த இந்தியாவில் முதல் கட்டமாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதல் கட்டமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 5 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.
அதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், போலீசார், பிற துறையில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தடுப்பூசி போடும் முதியவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் எனவும், அப்படி இல்லை என்றால் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை உட்பட ஆவணங்களை காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் சுகாதார துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறையினர் செய்துவந்தனர். இதேபோல் 45 வயதுக்கு மேற்பட்ட 59 வயதுக்கு உட்பட்ட இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 24 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 42 தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயது முதல் 59 வயது வரை உள்ள இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு சரியாக உள்ளதா என்பதை பார்த்த பின்னரே தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்கள் ½ மணி நேரம் கண்காணிப்பில் இருந்தனர்.
24 அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாகவும், 42 தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணம் வசூ லிக்கப்பட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X