என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அந்தியூர் அருகே மூச்சுத்திணறி 7 மாத கர்ப்பிணி பலி- போலீசார் விசாரணை
Byமாலை மலர்28 Feb 2021 12:50 PM GMT (Updated: 28 Feb 2021 12:50 PM GMT)
அந்தியூர் அருகே மூச்சுத்திணறி 7 மாத கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர்:
கர்நாடக மாநிலம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 35). இவருக்கும், சுமதி (29) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சுமதி கணவருடன் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பள்ளிபாளையம் பகுதிக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் சுமதி கர்ப்பம் ஆனார். 7 மாத கர்ப்பிணியான சுமதிக்கு நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உடனே வீட்டில் இருந்த முத்துசாமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுமதியை சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சுமதி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் அங்கு சென்று, சுமதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X