search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    குருபரப்பள்ளி அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

    குருபரப்பள்ளி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    குருபரப்பள்ளி:

    குருபரப்பள்ளி அருகே உள்ள பெரியகொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 34). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் கிருஷ்ணகிரி, பெங்களூரு போன்ற இடங்களில் சிகிச்சையும் பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த சிதம்பரம், கடந்த 22-ந் தேதி, பையனப்பள்ளி பகுதியில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். 

    இதை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் சிதம்பரம் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து குருபரப்பள்ளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×