search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ்கள் வராததால் மாணவர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.
    X
    பஸ்கள் வராததால் மாணவர்கள் வெகுநேரம் காத்திருந்தனர்.

    2-வது நாளாக ஸ்டிரைக்: விருதுநகர்-சிவகங்கை மாவட்டங்களில் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்

    பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் 2-வது நாளாக இன்றும் நீடித்தது. அதிகாரிகளின் முயற்சியால் இன்று 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டது.

    விருதுநகர்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்ணா தொழிற் சங்கம் தவிர மற்ற அனைத்து தொழிற் சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

    இதன் காரணமாக மாநிலம் முழுவதும் 50 சதவீத பஸ்களே இயக்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 355 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் வேலை நிறுத்தம் காரணமாக நேற்று 45 சதவீதம் மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டது.

    முக்கிய நகர் பகுதிகளுக்கு மட்டுமே பஸ்கள் இருந்தது பெரும்பாலான கிராம பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மாணவ, மாணவிகளும் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை.

    வேலைநிறுத்தம் காரணமாக தனியார் பஸ்களும், ஷேர் ஆட்டோக்களும் போட்டி போட்டுக் கொண்டு பயணிகளை ஏற்றிச் சென்றன. மேலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

    இந்த நிலையில் பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் 2-வது நாளாக இன்றும் நீடித்தது. விருதுநகர் மாவட்டத்தில் இன்று 6 மணிக்கு பிறகு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. அதிகாரிகளின் முயற்சியால் இன்று 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டது. வேலைநிறுத்தம் காரணமாக இன்றும் பொதுமக்கள், பயணிகள், வியாபாரிகள் சிரமத்தையே சந்தித்தனர்.

    சிவகங்கை மாவட்டத்திலும் இன்று குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டது. சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் சரிவர இயக்காததால் பொதுமக்க்ள பஸ் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

    தேவகோட்டை பேருந்து நிலையத்தில் இதனால் பள்ளி மாணவர்கள் பஸ் வசதி இல்லாததால் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    தேவகோட்டை அருகே உள்ள அனுமந்தகுடி பெரியகாரை கிராமங்களில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தேவகோட்டை நகரில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் இல்லாததால் அதிக அளவில் மாணவர்கள் இந்த 2 கிராம பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

    அரசு போக்குவரத்து கழக பணிமனை தேவகோட்டை நகரில் இருந்தும் அனுமந்தகுடி பள்ளிகளுக்கு மட்டும் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டது. ஆனால் பெரியகாரை மேல்நிலைப் பள்ளிக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவ,மாணவிகளும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமப்பட்டனர். இதனால் மாணவ மாணவிகள் நடந்து சென்றும், இரு சக்கர வாகனத்தில் அந்த வழியாக செல்லும் நபர்களிடம் உதவி கேட்டு செல்கின்றனர். ஊழியர்கள் போராட்டம் முடியும் வரை காலை, மாலை இரு வேளைகளிலும் மட்டுமாவது பேருந்து இயக்கினால் உதவியாக இருக்கும் என்று மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×