search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    முத்தியால்பேட்டையில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

    முத்தியால்பேட்டையில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை மஞ்சினி நகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கமலா. சம்பவத்தன்று இவர், அந்த பகுதியில் உள்ள வரதவள்ளி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றார். அங்கு கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அப்போது மர்மநபர் ஒருவர் கமலா அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டார். வீட்டிற்கு வந்து பார்த்த பின்னர் தான் தங்க சங்கிலி பறிபோனது கமலாவுக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அவர், முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×