search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    துரோகிகள் மூலம் ஆட்சி கவிழ்ப்பு- நாராயணசாமி ஆவேசம்

    துரோகிகள் மூலம் ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    21 கட்சிகள் இணைந்து மத்தியில் உள்ள பாசிச மதவாத சக்தியான பா.ஜனதா கட்சி புதுவை மாநிலத்தில் காங்கிரஸ், தி.மு.க. மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆட்சியை கவிழ்த்துள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

    புதுவை மாநிலத்தை அவமதித்துள்ளதை கண்டிக்கிறோம். பா.ஜனதா, என்ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. சதித்திட்டம் தீட்டி ஆட்சியை கவிழ்த்ததை கண்டித்து ஜனநாயக படுகொலை செய்துள்ளனர் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இதனை மக்கள் மன்றத்தில் கொண்டுசெல்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தியா முழுவதும் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜனநாயக படுகொலையை இந்தியாவில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் பா.ஜனதா அரங்கேற்றி உள்ளது. அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் குதிரை பேரம் செய்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பு செய்துள்னர்.

    கர்நாடகாவில் ரூ.பல ஆயிரம் கோடி பேரம் பேசி ஆட்சி மாற்றம் செய்தனர். ராஜஸ்தானில் அவர்களின் வேலை பலிக்க வில்லை. புதுவையில் 5 ஆண்டுகளை நாம் நிறைவு செய்துவிட்டோம். 10 நாட்களே தேர்தல் தேதி அறிவிப்புக்கு உள்ளது.

    தற்போது ஆட்சியை கவிழ்க்கும் செயலை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க.வினர் செய்துள்ளனர். இதற்கு அவசியம் என்ன? அதிகார பலம், பணபலத்தை பயன்படுத்தியும், காங்கிரஸ் கட்சியில் இருந்து சில துரோகிகள் மூலம் ஆட்சியை கவிழ்த்தனர்.

    ஆனால், புதிதாக ஆட்சி அமைக்க முடியவில்லை. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கை கோரும் வாக் கெடுப்பில் வாக்களிக்கலாம் என நீதிமன்றம் கூறவில்லை. இதனால் அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது.

    புதுவை அரசுக்கு தொல்லை கொடுக்க திட்டமிட்டு கவர்னர் கிரண்பேடியை அனுப்பி வைத்தார்கள். எங்களை நிம்மதியாக ஆட்சி செய்யவிடவில்லை. உண்ணாவிரதம், தர்ணா, கையெழுத்து இயக்கம், தெருமுனை பிரசாரம் என கவர்னரை கண்டித்து நடத்திய போராட்டத்துக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.பி. ரவிக்குமார் இந்த போராட்டத்தில் பங் கேற்றுள்ளனர். அவர்களுக்கு நன்றி.

    ஏற்கனவே காரைக்காலில் புறவழிச்சாலையை திறந் துள்ளோம். தற்போது மீண்டும் அதனை திறக்க உள்ளனர். மேரி கட்டடத்தை திறக்க திறப்பு விழா செய்தோம். அதனை தடுத்து நிறுத்தினர். பல திட்டங்களை நாம் செயல்படுத்தி உள்ளோம்.

    கடந்த தேர்தலில் 18 தொகுதியில் பா.ஜனதா போட்டியிட்டது. எத்தனை தொகுதியில் டெபாசிட் பெற்றார்கள். பா.ஜன தாவுடன் சேர்பவர்களும் இத்தேர்தலில் காணாமல் போவார்கள். பாஜனதா டெபாசிட் இழந்த கட்சி.

    வியாபாரிகளை, பொது மக்களை பா.ஜனதா கட்சியினர் மிரட்டுகின்றனர். ரவுடிகளை கட்சியில் சேர்த்துள்ளனர். பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணிக்கு நான் சவால் விடுகிறேன். வருகிற தேர்தலில் மக்கள் உங்களுக்கு பூஜ்யத்தைத்தான் கொடுப்பார்கள்.

    அரியானா மாநிலத்தில் சவுதாலா பேரனின் கட்சி 10 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். அவர்களை இழுத்து பா.ஜனதா கூட்டணியாக ஆட்சி அமைத்தனர். சில காலம் கழித்து சவுதாலா கட்சியை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்களை தங்கள் கட்சியின் வசப் படுத்தினர்.

    இதேநிலைதான் நாளை ரங்கசாமிக்கு ஏற்படும். யார், யாரையோ மிரட்டுகின்றனர். என்னை மிரட்டி பாருங்கள். கொள்கையும், கோட்பாடும் இல்லாதவர்கள்தான் மிரட்ட லுக்கு அடிபணிவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×