என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருத்தங்கல்லில் குடும்ப தகராறில் பெண் தற்கொலை
Byமாலை மலர்23 Feb 2021 4:41 PM GMT (Updated: 23 Feb 2021 4:41 PM GMT)
திருத்தங்கல்லில் குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
திருத்தங்கல்லை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கும், கார்த்திகைபட்டியை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி தனது கணவர் வசித்து வரும் சமத்துவபுரம் பகுதிக்கு வந்த ராமலட்சுமி திடீரென்று தீக்குளித்தார். இதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்ட ராமலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து அங்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ராமலட்சுமியின் தாய் வெள்ளைத்தாய் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தங்கல்லை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கும், கார்த்திகைபட்டியை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி தனது கணவர் வசித்து வரும் சமத்துவபுரம் பகுதிக்கு வந்த ராமலட்சுமி திடீரென்று தீக்குளித்தார். இதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்ட ராமலட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து அங்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ராமலட்சுமியின் தாய் வெள்ளைத்தாய் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X