என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் அருகே விஷம் குடித்து ராணுவ வீரர் தற்கொலை
Byமாலை மலர்22 Feb 2021 3:01 PM GMT (Updated: 22 Feb 2021 3:01 PM GMT)
வேலூர் அருகே விஷம் குடித்து ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூரை அடுத்த பொய்கை மோட்டூரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரின் மகன் வசந்தகுமார் (வயது 23). ராணுவ வீரரான அவர் லடாக் பகுதியில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். குடும்ப பிரச்சினையால் அவரின் வீட்டில் அடிக்கடி வாக்கு வாதமும், தகராறும் ஏற்பட்டு வந்தது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். கடந்தசில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வசந்தகுமார் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார். அவரை, குடும்பத்தினர் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X