என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோகூர் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்
Byமாலை மலர்22 Feb 2021 4:39 AM GMT (Updated: 22 Feb 2021 4:39 AM GMT)
கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர் ஊராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
சிக்கல்:
கீழ்வேளூர் ஒன்றியம் கோகூர் ஊராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோகூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் பிரபு தலைமையில் டாக்டர்கள் முருகேஷ் குமார், பிரபு, கயல்விழி, விக்னேஷ், தீபிகா, ஜனனி ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் பொது மருத்துவம், கண் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம் போன்றவை அளிக்கப்பட்டது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் வடகரை, கோகூர், ஆணைமங்கலம், ஏரவாஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 693 பேர் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெற்றனர். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பக்கிரிசாமி, ஊராட்சி உறுப்பினர்கள். சுகாதார ஆய்வாளார்கள், கிராம செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X