search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிரட்டல்
    X
    மிரட்டல்

    தலைமை ஆசிரியைக்கு மிரட்டல்: 2 பேர் கைது

    தலைமை ஆசிரியைக்கு மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்திகிரி:

    மத்திகிரியை சேர்ந்தவர் கவிதா (வயது 46). இவர் அங்குள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மத்திகிரி குதிரைபாளையத்தை சேர்ந்த ராம்பக்கர் (வயது 24), வேலன் (50) ஆகியோர் பள்ளியின் பெண்கள் கழிவறை பக்கமாக நின்று கொண்டிருந்தனர். இதை அறிந்த தலைமை ஆசிரியை கவிதா, அவர்கள் 2 பேரையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தலைமை ஆசிரியையை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்பக்கர், வேலன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×