search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.
    X
    தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.

    கட்டளைமேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் தர்ணா

    கட்டளைமேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி குளித்தலையில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குளித்தலை:

    பணப்பயிர்களை காப்பாற்ற வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கக்கோரி கட்டளை, தென்கரை பாசன விவசாயிகள் சங்கத்தினர் குளித்தலை பெரியபாலம் பகுதியில் உள்ள ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 9-ந் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்களிடம் பேசிய அதிகாரிகள், தென்கரை வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்கப்படும் என்றும், கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் தண்ணீர் திறக்க உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து ஒரு வாரத்திற்குள் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    அதிகாரிகள் கூறியபடி, தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதை கண்டித்தும் உடனடியாக கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரியும் குளித்தலை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தின் உள்ளே நேற்று மாலை விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து விவசாயிகளிடம் பேசிய அதிகாரிகள் வருகிற 23-ந் தேதி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என‌ கூறியதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×