என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விடுதி முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்20 Feb 2021 2:11 PM GMT (Updated: 20 Feb 2021 2:11 PM GMT)
விடுதி முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு சம்பவத்தன்று நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது குறித்து விடுதி உரிமையாளர் ஆரோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் திருடர்களை வலைவீசி தேடி வந்தனர்.
விடுதி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை கள்ளச்சாவி போட்டு திருடிச்சென்றது தெரியவந்தது. அவர்கள் குறித்து விசாரித்தபோது, சென்னை அயோத்திக்குப்பத்தை சேர்ந்த அருண் (வயது 29), மணிகண்டன் (25) என்பதும், அவர்கள் புதுவைக்கு சுற்றுலா வந்து இந்த விடுதியில் தங்கியிருந்ததும், விடுதியை காலி செய்துவிட்டு செல்லும்போது மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X