search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

    உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகையை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் வயலூர் கூட் ரோடு அருகே உள்ள ஏட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சவுரிராஜ். இவரது மனைவி பாத்திமா ராணி (வயது 49). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் பிரமியாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகளை பார்ப்பதற்காக செய்யாறு சென்றதாக கூறப்படுகிறது.

    நேற்று காலை பாத்திமா ராணியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட கதவு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பாத்திமா ராணிக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக செய்யாறில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வில் ஈடுபட்டார். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெருநகர் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×