search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    சிவகாசி அருகே டிராக்டரில் இருந்து விழுந்தவர் பலி

    சிவகாசி அருகே டிராக்டரில் இருந்து விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி செங்கமலப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 44). இவர் தனக்கு சொந்தமான டிராக்டரில் வைக்கோல் ஏற்றி உள்ளார். பின்னர் கயிறு போட்டு கட்டி விட்டு கயிற்றை சரி பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து டிராக்டரில் இருந்து ராஜேந்திரன் கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மதுரையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×