search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கடலூர் முதுநகரில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

    கடலூர் முதுநகரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(வயது 40). மீனவர். இவருடைய மனைவி மாலதி. சுந்தரமூர்த்திக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மாலதிக்கும், சுந்தரமூர்த்திக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்றும், கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுந்தரமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×