search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை - மத்திய மந்திரியிடம் விருதுநகர் வியாபார சங்கம் வலியுறுத்தல்

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் வியாபார தொழிற்சங்கம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.
    விருதுநகர்:

    இதுகுறித்து விருதுநகர் வியாபாரிகள் சங்க தலைவர் வி.வி.எஸ். யோகன், மத்திய நிதி மந்திரிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயருவதால் தடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

    தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கிவிட்டது. ஒரு லிட்டர் டீசல் விலையும் ரூ.90-க்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு வாகனங்களை பயன்படுத்துவதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை கலால் வரி ரூ.32 விதிக்கப்பட்டுள்ளது. கலால் வரியை குறைத்து பெட்ரோல் விலையை அதிகபட்சமாக ரூ.70 ஆகவும், டீசல் விலையை அதிகபட்சமாக ரூ.60 ஆகவும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்போது பெட்ரோல், டீசல் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பது ஏற்புடையது அல்ல. எனவே பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ள நிலையில் அதனை தவிர்க்க பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×