search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 39 பேர் பாதிப்பு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 134 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 51 ஆயிரத்து 47 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 773 பேர் உயிரிழந்துள்ளனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 402 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 862 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 442 பேர் உயிரிழந்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 21 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 43 ஆயிரத்து 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 42 ஆயிரத்து 992 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒருவர் இறந்த நிலையில், இதுவரையில் 694 பேர் கொரானா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.
    Next Story
    ×