என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு டயாலிசிஸ் சிகிச்சை
Byமாலை மலர்12 Feb 2021 8:30 AM GMT (Updated: 12 Feb 2021 8:30 AM GMT)
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமு, விவசாயி. இவருக்கு சமீபத்தில் திருமணமானது. இவரது மனைவி ரம்யா. நிறைமாத கர்ப்பிணியான ரம்யா தலைப்பிரசவத்திற்காக கடந்த மாதம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 16-ந்தேதி ரம்யாவுக்கு 2.7 கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த இரண்டு நாட்களுக்கு பிறகு ரத்த வாந்தி, ரத்தம் கலந்த மலம் மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது.
குழந்தையின் நுரையீரலிலிருந்தும் ரத்தகசிவு ஏற்பட்டதால் குழந்தைக்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. ரத்த கசிவினை சரி செய்ய 5 முறை ரத்த சிவப்பணுக்கள், ரத்த தட்டணுக்கள் மற்றும் பிளாஸ்மா செலுத்தப்பட்டது. குழந்தையை பரிசோதித்து பார்த்ததில் குழந்தையின் சிறுநீரகம் செயலிழந்து, உப்பு சத்து மிக அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.
கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி அறிவுறுத்தலின்பேரில் குழந்தையின் உயிரை காப்பாற்ற பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் பீட்டர், சிறுநீரக சிறப்பு மருத்துவர் சரவணகுமார் மற்றும் மருத்துவ குழுவினரால் குழந்தையின் வயிற்றில் குழாய் செலுத்தப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் உப்புச்சத்து மற்றும் சுவாசம் இயல்பு நிலைக்கு வந்தது. செயற்கை சுவாசம் படிப்படியாக நீக்கப்பட்டு குழந்தைக்கு தாய்ப்பாலும் கொடுக்கப்பட்டது. கிருமித்தொற்றுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. 25 நாட்கள் சிகிச்சையில் குழந்தை உடல்நலம் தேறிய பின்பு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பச்சிளங்குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய டாக்டர் பாலமுருகன் தலைமையிலான குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி பாராட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமு, விவசாயி. இவருக்கு சமீபத்தில் திருமணமானது. இவரது மனைவி ரம்யா. நிறைமாத கர்ப்பிணியான ரம்யா தலைப்பிரசவத்திற்காக கடந்த மாதம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 16-ந்தேதி ரம்யாவுக்கு 2.7 கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த இரண்டு நாட்களுக்கு பிறகு ரத்த வாந்தி, ரத்தம் கலந்த மலம் மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது.
குழந்தையின் நுரையீரலிலிருந்தும் ரத்தகசிவு ஏற்பட்டதால் குழந்தைக்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. ரத்த கசிவினை சரி செய்ய 5 முறை ரத்த சிவப்பணுக்கள், ரத்த தட்டணுக்கள் மற்றும் பிளாஸ்மா செலுத்தப்பட்டது. குழந்தையை பரிசோதித்து பார்த்ததில் குழந்தையின் சிறுநீரகம் செயலிழந்து, உப்பு சத்து மிக அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.
கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி அறிவுறுத்தலின்பேரில் குழந்தையின் உயிரை காப்பாற்ற பச்சிளங்குழந்தைகள் சிறப்பு மருத்துவர் பீட்டர், சிறுநீரக சிறப்பு மருத்துவர் சரவணகுமார் மற்றும் மருத்துவ குழுவினரால் குழந்தையின் வயிற்றில் குழாய் செலுத்தப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் உப்புச்சத்து மற்றும் சுவாசம் இயல்பு நிலைக்கு வந்தது. செயற்கை சுவாசம் படிப்படியாக நீக்கப்பட்டு குழந்தைக்கு தாய்ப்பாலும் கொடுக்கப்பட்டது. கிருமித்தொற்றுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. 25 நாட்கள் சிகிச்சையில் குழந்தை உடல்நலம் தேறிய பின்பு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பச்சிளங்குழந்தையை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய டாக்டர் பாலமுருகன் தலைமையிலான குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி பாராட்டினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X