search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    புதுவையில் கொரோனாவுக்கு மேலும் 19 பேர் பாதிப்பு

    புதுவையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 707 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 19 பேருக்கு தொற்று உறுதியானது. 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 5 லட்சத்து 96 ஆயிரத்து 527 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதில் 39 ஆயிரத்து 372 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்களில் 126 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 167 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 38 ஆயிரத்து 423 பேர் குணமடைந்துள்ளனர். 656 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை 4 ஆயிரத்து 370 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×