என் மலர்
செய்திகள்

நகை திருட்டு
திருவண்ணாமலையில் போலீஸ் என கூறி பெண்ணிடம் 18 பவுன் நகை பறிப்பு
திருவண்ணாமலையில் போலீஸ் என கூறி பெண்ணிடம் 18 பவுன் நகை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவர் மங்கலத்தில் நகை அடகு கடை வைத்துள்ளார். இவரது மனைவி மணிமொழி (வயது 51). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள தனியார் வங்கி மற்றும் துணிக்கடைகளுக்கு மணிமொழி சென்றுள்ளார். அப்போது அவர் சுமார் 18 பவுன் நகை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து அவர் சன்னதி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சன்னதி தெருவில் இருந்து அய்யங்குள தெரு பிரியும் பகுதியில் நின்று கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர்கள் 2 பேர் மணிமொழியிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.
அப்போது அவர்கள் தங்களை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு, பொது இடத்தில் இவ்வளவு நகை அணிந்து வரலாமா என அறிவுரை வழங்கி நகையை கழற்றி கொடுங்கள் பேப்பரில் மடித்து தருகிறோம் என கூறியுள்ளனர்.
இதனை நம்பி அவர் நகைகளை கழட்டி அந்த மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அவர்களும் அதனை பேப்பரில் மடித்து கொடுப்பது போல் செய்து சாதுரியமாக அங்கிருந்து மோட்டார் சைக்கிளிள் தப்பி சென்றுள்ளனர். இதனால் செய்வதறியாமல் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் மணிமொழி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ் எனக் கூறிய மர்ம நபர்கள் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவர் மங்கலத்தில் நகை அடகு கடை வைத்துள்ளார். இவரது மனைவி மணிமொழி (வயது 51). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள தனியார் வங்கி மற்றும் துணிக்கடைகளுக்கு மணிமொழி சென்றுள்ளார். அப்போது அவர் சுமார் 18 பவுன் நகை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து அவர் சன்னதி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சன்னதி தெருவில் இருந்து அய்யங்குள தெரு பிரியும் பகுதியில் நின்று கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர்கள் 2 பேர் மணிமொழியிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.
அப்போது அவர்கள் தங்களை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு, பொது இடத்தில் இவ்வளவு நகை அணிந்து வரலாமா என அறிவுரை வழங்கி நகையை கழற்றி கொடுங்கள் பேப்பரில் மடித்து தருகிறோம் என கூறியுள்ளனர்.
இதனை நம்பி அவர் நகைகளை கழட்டி அந்த மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அவர்களும் அதனை பேப்பரில் மடித்து கொடுப்பது போல் செய்து சாதுரியமாக அங்கிருந்து மோட்டார் சைக்கிளிள் தப்பி சென்றுள்ளனர். இதனால் செய்வதறியாமல் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசில் மணிமொழி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ் எனக் கூறிய மர்ம நபர்கள் தேடி வருகின்றனர்.
Next Story






