search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்திய 2 வாலிபர்கள் கைது

    கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் பொன்வெளி- பாப்பாக்கோவில் மெயின் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் நாரணமங்கலம் மேலத்தெருவை சேர்ந்த ராமசாமி மகன் மகேஸ்வரன் (வயது22), ஓரத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் அய்யப்பன் (20) என்பதும, அவர்கள் காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. 
    இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×