search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கிருமாம்பாக்கத்தில் கார் மோதி டிக்கெட் பரிசோதகர் பலி

    கிருமாம்பாக்கத்தில் கார் மோதி டிக்கெட் பரிசோதகர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    பாகூர் அருகே கரையாம்புத்தூர் நேருநகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 48). இவர் தனியார் பஸ்சில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். கடந்த 3-ந் தேதி சொந்த வேலை காரணமாக கிருமாம்பாக்கத்துக்கு சென்ற அவர், புதுச்சேரி-கடலூர் சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக ரமேஷ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தின்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற வீராணம் பகுதியை சேர்ந்த தேவநாதன் என்பவரும் காயமடைந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் காயமடைந்த இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமேஷ் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். தேவநாதன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×