என் மலர்
செய்திகள்

உயிரிழப்பு
மண்ணிவாக்கம் அருகே சாலையோரம் குட்டையில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
மண்ணிவாக்கம் அருகே சாலையோரம் குட்டையில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் அருகே உள்ள வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையோரமாக மழைநீர் தேங்கி இருந்த ஒரு குட்டையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார். எப்படி குட்டையில் மூழ்கி இறந்தார் என்பது குறித்து தெரியவில்லை, இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் அருகே உள்ள வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையோரமாக மழைநீர் தேங்கி இருந்த ஒரு குட்டையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று குட்டையில் மூழ்கி இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story






