என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    கூவத்தூரில் நாளை மின்தடை

    கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
    கல்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த அடையாளச்சேரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட கூவத்தூர் கிராமத்தில் நாளை (வியாழக்கிழமை) புதிய மின் கம்பிகள் அமைத்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே அடையாளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கடலூர், பரமேஸ்வரிமங்கலம், நத்தம், சோழக்கட்டு, வேப்பஞ்சேரி, கூவத்தூர், கீழார்கொல்லை, நெடுமரம், நெற்குணப்பட்டு, தட்டாம்பட்டு, முகையூர், தென்பட்டினம் உள்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று மதுராந்தகம் மின் செயற்பொறியாளர் கிருபானந்தன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×