search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கள்ளக்காதல் தகராறில் வேன் டிரைவர் அடித்து படுகொலை - சித்தியுடன் தொடர்பு வைத்ததால் கூலித்தொழிலாளி ஆத்திரம்

    புஞ்சைபுளியம்பட்டி அருகே கள்ளக்காதல் தகராறில் வேன் டிரைவர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புஞ்சைபுளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி அடுத்த அன்னே கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 32). வேன் டிரைவர்.இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அதே பகுதியைச் சேர்ந்தவர் அல்லி முத்து (31). கூலி தொழிலாளி. இவருக்கும் திருமணமாகவில்லை. அல்லி முத்துவின் சித்தி வசந்தி (50) அதே பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் மகேந்தி ரனுக்கும் வசந்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.மகேந்திரனுக்கும் வசந்திக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் குறித்து அல்லிமுத்துக்கு தெரிய வந்தது. அவர் மகேந்திரனை சித்தியுடனான கள்ளத் தொடர்பை கை விடுமாறு கண்டித்துள்ளார். ஆனால் மகேந்திரன் அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை.

    இந்நிலையில் நேற்று இரவு மகேந்திரன் வசந்தி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த அல்லிமுத்து மகேந்திரனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அல்லிமுத்து மகேந்திரனை கையால் கடுமையாகத் தாக்கினார். இதையடுத்து மகேந்திரன் அருகிலிருந்த சமுதாய கூட திண்ணையில் மயங்கி விழுந்து இறந்தார். அல்லிமுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அல்லிமுத்துவை தேடி வருகின்றனர்.


    Next Story
    ×