search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு கொரோனா

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு 14 ஆயிரத்து 325 ஆக உயர்ந்தது.

    அதே நேரத்தில் நேற்று 3 பேர் மட்டுமே குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 982 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு 150 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 193 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஈரோடு டவுன் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் உள்பட அனைத்து போலீசாரும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 2 போலீசாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து 3 பேரும் நேற்று பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    Next Story
    ×