search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வந்தவாசி பகுதியில் மதுபானம் விற்ற 12 பேர் கைது

    வந்தவாசி பகுதியில் மதுபானம் விற்ற 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான தெள்ளார், கீழ்கொடுங்காலூர், பொன்னூர், வடவணக்கம்பாடி, கீழ்ப்பாக்கம், வெண்குன்றம், நல்லூர், கூத்தம்பட்டு, மழையூர் ஆகிய கிராமங்களில் வெளி மார்க்கெட்டில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் வந்தவாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், கீழ்கொடுங்காலூர் இன்ஸ்பெக்டர் புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மஞ்சுநாதன், மோகன், ஆசைத்தம்பி, வேலு, ஜெயராமன், கணேசன், நடராஜன் மற்றும் போலீசார் மேற்கண்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வெண்குன்றத்தைச் சேர்ந்த குமரேசன் (வயது 36), எள்ளுபாறையைச் சேர்ந்த குமார் (55), நல்லூரைச் சேர்ந்த மாயக்கிருஷ்ணன் (49), சுபன் (50), கூத்தம்பட்டை சேர்ந்த முருகன் (45), தெள்ளாரைச் சேர்ந்த விஜிபாபு (33), செய்யாறைச் சேர்ந்த சலீம் (28), செங்கம்பூண்டியைச் சேர்ந்த முருகன் (50), வந்தவாசி கோட்டை காலனியைச் சேர்ந்த வெங்கடேசன் (48), சுந்தர் என்பவரின் மனைவி அமுலு (38), கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பழனிவேல் (38), கீழ்கொடுங்காலூரைச் சேர்ந்த முனுசாமி (55) ஆகிய 12 பேர் மதுபானம் விற்றதாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபானப் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×