என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேக்கம் இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
Byமாலை மலர்30 Jan 2021 12:30 PM GMT (Updated: 30 Jan 2021 12:30 PM GMT)
சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேக்கம் இ்ல்லாமல் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணல்மேடு:
மணல்மேடு மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டருந்த சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருகின்ற காரணத்தாலும் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது தேக்கமின்றி கொள்முதல் செய்யவும், பிற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளால் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக் கூடாது எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், நடந்து முடிந்த குறுவை அறுவடை காலகட்டங்களில் பிற மாவட்ட நெல் மூட்டைகளின் வருகை, கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நெல் மூட்டைகளின் தேக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளால் விவசாயிகளுடைய நெல் மூட்டைகளை சரிவர கொள்முதல் செய்யாமல் பல நாட்கள் கொள்முதல் நிலையத்திலேயே விவசாயிகள் அடுக்கி வைத்து காத்திருந்தனர். இந்தநிலையில் கனமழையால் நெல் மணிகள் முளைத்ததால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர்.
தற்போது சம்பா அறுவடை நடைபெறுகிறது. நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அடுக்கி வைத்து காக்க வைக்காமல் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், பிற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளால் கொண்டுவரக்கூடிய நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கூடாது என்றும். 22 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X