search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எந்திரம் மூலம் சம்பா அறுவடை பணி நடைபெறுவதை படத்தில் காணலாம்.
    X
    எந்திரம் மூலம் சம்பா அறுவடை பணி நடைபெறுவதை படத்தில் காணலாம்.

    தேக்கம் இல்லாமல் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

    சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேக்கம் இ்ல்லாமல் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மணல்மேடு:

    மணல்மேடு மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டருந்த சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருகின்ற காரணத்தாலும் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது தேக்கமின்றி கொள்முதல் செய்யவும், பிற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளால் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக் கூடாது எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், நடந்து முடிந்த குறுவை அறுவடை காலகட்டங்களில் பிற மாவட்ட நெல் மூட்டைகளின் வருகை, கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நெல் மூட்டைகளின் தேக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளால் விவசாயிகளுடைய நெல் மூட்டைகளை சரிவர கொள்முதல் செய்யாமல் பல நாட்கள் கொள்முதல் நிலையத்திலேயே விவசாயிகள் அடுக்கி வைத்து காத்திருந்தனர். இந்தநிலையில் கனமழையால் நெல் மணிகள் முளைத்ததால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர்.

    தற்போது சம்பா அறுவடை நடைபெறுகிறது. நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அடுக்கி வைத்து காக்க வைக்காமல் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், பிற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளால் கொண்டுவரக்கூடிய நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கூடாது என்றும். 22 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×