என் மலர்
செய்திகள்

கொள்ளை
பண்ருட்டி அருகே டாக்டர் வீட்டில் நகை- பணம் கொள்ளை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே டாக்டர் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சின்னபகண்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் டாக்டர் முத்துக்குமார். இவர் புதுவை அரியாங்குப்பத்தில் தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். அரியாங்குப்பத்தில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு இவருக்கு சொந்தமான சின்ன பகண்டையில் உள்ள மாடி வீட்டில் நேற்று இரவு மர்மநபர்கள் யாரோ முன்பக்க கதவு பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த நகை, பணம், வெண்கல பாத்திரம் ஆகியவற்றை திருடிசென்றனர்.
கதவு திறந்து கிடப்பது கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் டாக்டர் முத்துக்குமாருக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்த அவர் நேரில் தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர் கொள்ளை போன பொருட்கள் விவரம் குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மோப்ப நாய் பிரிவு மற்றும் விரல் ரேகை பிரிவு வந்து தடயத்தை சேகரித்து சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இதன் விளைவாக பண்ருட்டி அருகே பி.எம். பாளையத்தை சேர்ந்த முகிலன் (வயது 21), ஜெய்கணேஷ் (23) ஆகியோரை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சின்னபகண்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் டாக்டர் முத்துக்குமார். இவர் புதுவை அரியாங்குப்பத்தில் தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். அரியாங்குப்பத்தில் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு இவருக்கு சொந்தமான சின்ன பகண்டையில் உள்ள மாடி வீட்டில் நேற்று இரவு மர்மநபர்கள் யாரோ முன்பக்க கதவு பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த நகை, பணம், வெண்கல பாத்திரம் ஆகியவற்றை திருடிசென்றனர்.
கதவு திறந்து கிடப்பது கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் டாக்டர் முத்துக்குமாருக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்த அவர் நேரில் தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர் கொள்ளை போன பொருட்கள் விவரம் குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மோப்ப நாய் பிரிவு மற்றும் விரல் ரேகை பிரிவு வந்து தடயத்தை சேகரித்து சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இதன் விளைவாக பண்ருட்டி அருகே பி.எம். பாளையத்தை சேர்ந்த முகிலன் (வயது 21), ஜெய்கணேஷ் (23) ஆகியோரை கைது செய்தனர்.
Next Story






