search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை வானிலை ஆய்வு மையம்
    X
    சென்னை வானிலை ஆய்வு மையம்

    அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

    கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது:-

    கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

    அடுத்த 2 நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனி மூட்டமும் நிலவும்.

    1, 2-ந்தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு எச்ரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×