என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கலசபாக்கம் அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்28 Jan 2021 10:02 AM GMT (Updated: 28 Jan 2021 10:02 AM GMT)
கலசபாக்கம் அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலசபாக்கம்:
கலசபாக்கத்தை அடுத்த லாடவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் மகன் ராஜீவ்காந்தி (வயது 33). இவர், போளூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் பீல்டு மேனாக வேலை பார்த்து வந்தார். கடந்தசில ஆண்டுகளாக சர்க்கரை ஆலை மூடப்பட்டு இருந்தது. இதனால் அவர் வேலை இழந்து வீட்டிலேயே இருந்துள்ளார்.
மேலும் அவருக்கு போதிய வருமானம் இல்லாததால் கந்து வட்டிக்கு கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் கடன் தொகை உயர்ந்ததால் அவரால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராஜீவ்காந்தி நேற்று முன்தினம் விஷத்தை குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜீவ்காந்தி பரிதாபமாக உயிரிழந்தார். கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலசபாக்கத்தை அடுத்த லாடவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் மகன் ராஜீவ்காந்தி (வயது 33). இவர், போளூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் பீல்டு மேனாக வேலை பார்த்து வந்தார். கடந்தசில ஆண்டுகளாக சர்க்கரை ஆலை மூடப்பட்டு இருந்தது. இதனால் அவர் வேலை இழந்து வீட்டிலேயே இருந்துள்ளார்.
மேலும் அவருக்கு போதிய வருமானம் இல்லாததால் கந்து வட்டிக்கு கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் கடன் தொகை உயர்ந்ததால் அவரால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராஜீவ்காந்தி நேற்று முன்தினம் விஷத்தை குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜீவ்காந்தி பரிதாபமாக உயிரிழந்தார். கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X