search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    கயத்தார் அருகே பாம்பு கடித்து விவசாயி பலி

    கயத்தார் அருகே தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயியை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கயத்தாறு:

    கயத்தார் அருகேயுள்ள சொக்கலிங்கபுரம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன்(வயது 55). இவர் ஊருக்கு அருகிலுள்ள தனது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பாம்பு கடித்து மயங்கியுள்ளார். உடனடியாக அவரது மகன்களான வையனபிரகாஷ், ராஜசேகர், ஆகியோர் அவரை கடம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன சவுந்தரராஜனுக்கு மனோன்மணி என்ற மனைவியும், மகன்களும் உள்ளனர்.
    Next Story
    ×