என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
வள்ளியூர் அருகே மது விற்றவர் கைது
வள்ளியூர் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர்:
வள்ளியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் போலீசார் வள்ளியூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வள்ளியூர் நம்பியான்விளை அருகே வெள்ளை சாக்கு பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் வள்ளியூர் நம்பியான்விளையை சேர்ந்த கணபதி (வயது 54) எனவும், அரசு டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்று வந்ததாக ஒத்துக்கொண்டார். கணபதியை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 4 மது பாட்டில்களையும், மது பாட்டில்கள் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ரூ.150ஐயும் பறிமுதல் செய்தனர்.
Next Story