search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தலைவாசல் அருகே ஆடுகள் திருடிய 4 பேர் கைது

    தலைவாசல் அருகே ஆடுகள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தலைவாசல்:

    தலைவாசல் அருகே வீரகனூர் லத்துவாடி காவலர் சோதனைச்சாவடி அருகில் வீரகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படியாக 2 மோட்டார் சைக்கிள்களில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு வந்தவர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 21), மணிகண்டன் (19) மற்றும் 2 சிறுவர்கள் என தெரியவந்தது.

    4 பேரும் வீரகனூர் சந்தைப்பேட்டையில் 2 ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்ததும், ஆடுகளை திருடிக்கொண்டு வந்ததும் தெரியவந்தது. ஆடு திருடிய 4 பேர் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், 2 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×