என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரி கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது
Byமாலை மலர்24 Jan 2021 4:15 AM GMT (Updated: 24 Jan 2021 4:15 AM GMT)
கோட்டூர் பஸ் நிறுத்தம் அருகே லாரி கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கமலேஷ்குமார் (வயது 36). லாரி டிரைவர். இவர் அகமதாபாத்தில் இருந்து விழுப்புரத்திற்கு கன்டெய்னர் லாரியில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை ஏற்றி சென்றார். கடந்த 21-ந் தேதி இரவு கோட்டூர் பஸ் நிறுத்தம் அருகே சாப்பிடுவதற்காக லாரியை நிறுத்தினார். அப்போது அங்கு வந்த 2 பேர், டிரைவர் கமலேஷ்குமாரிடம் தகராறு செய்து லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். இது குறித்து டிரைவர் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது பர்கூரை அடுத்த ஜெகதேவியை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திக் (27) மற்றும் கூலித்தொழிலாளி நவீன்குமார் (26) ஆகிய 2 பேரும் லாரி கண்ணாடியை உடைத்தது தெரிந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X