search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    லாரி கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது

    கோட்டூர் பஸ் நிறுத்தம் அருகே லாரி கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கமலேஷ்குமார் (வயது 36). லாரி டிரைவர். இவர் அகமதாபாத்தில் இருந்து விழுப்புரத்திற்கு கன்டெய்னர் லாரியில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை ஏற்றி சென்றார். கடந்த 21-ந் தேதி இரவு கோட்டூர் பஸ் நிறுத்தம் அருகே சாப்பிடுவதற்காக லாரியை நிறுத்தினார். அப்போது அங்கு வந்த 2 பேர், டிரைவர் கமலேஷ்குமாரிடம் தகராறு செய்து லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். இது குறித்து டிரைவர் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது பர்கூரை அடுத்த ஜெகதேவியை சேர்ந்த லாரி டிரைவர் கார்த்திக் (27) மற்றும் கூலித்தொழிலாளி நவீன்குமார் (26) ஆகிய 2 பேரும் லாரி கண்ணாடியை உடைத்தது தெரிந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×