என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழந்தை திருமணம் செய்த சிறுமி தற்கொலை - போலீசார் விசாரணை
Byமாலை மலர்23 Jan 2021 11:03 PM GMT (Updated: 23 Jan 2021 11:03 PM GMT)
குழந்தை திருமணம் செய்த சிறுமி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
காட்பாடி:
வேலூர் மாநகராட்சி விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சிறுமி, கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளாள். குழந்தை திருமணம் நடத்தி வைக்கப்பட்ட நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்தவர்கள் வேலைக்கு சென்று விட்டனர். பகலில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி மாடிக்கு சென்று அங்கு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள். மாலையில் வேலை முடிந்து வந்தவர்கள் சிறுமியை தேடியபோது வீட்டின் மாடியில் அவள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை திருமணம் நடந்தது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சி விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சிறுமி, கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளாள். குழந்தை திருமணம் நடத்தி வைக்கப்பட்ட நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்தவர்கள் வேலைக்கு சென்று விட்டனர். பகலில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி மாடிக்கு சென்று அங்கு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாள். மாலையில் வேலை முடிந்து வந்தவர்கள் சிறுமியை தேடியபோது வீட்டின் மாடியில் அவள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை திருமணம் நடந்தது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X