என் மலர்
செய்திகள்

கைது
ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது
ஆன்லைன் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது வேதாரண்யம் மேல கோபுர வாசல் அருகே ஒருவர் தனது செல்போன் மூலம் ரகசியமாக மறைவிடத்தில் இருந்து பேசிக்கொண்டு இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் செம்போடை மகாராஜபுரத்தை சேர்ந்த தியாகராஜன்(வயது42) என்றும் அவர் தனது ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து செல்போன் மற்றும் ரூ.420-ஐ பறிமுதல் செய்தனர்.
Next Story






