என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணி அருகே மைனர் பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்
Byமாலை மலர்23 Jan 2021 12:45 AM GMT (Updated: 23 Jan 2021 12:45 AM GMT)
ஆரணி அருகே 27ந்தேதி நடக்க இருந்த மைனர் பெண் திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
ஆரணி:
ஆரணி தாலுகாவைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிளஸ்-2 முடித்துள்ளார். இவருக்கும், தஞ்சாவூரை அடுத்த அம்மாப்பேட்டையைச் சேர்ந்த உறவினர் மகனான அருண்குமார் என்பவருக்கும் வரும் 27-ந்தேதி காஞ்சீபுரத்தில் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி குழந்தைகள் நலக் குழும அலுவலர் அம்சா, ஆரணி விரிவு அலுவலர் ருக்மணி, ஊர் நல அலுவலர் ஞானம்மாள் ஆகியோர் சம்பந்தப்பட்ட மைனர் பெண்ணின் வீட்டுக்குச் சென்றனர்.
அங்கிருந்த மைனர் பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பெண்ணுக்கு திருமணம் நடக்கயிருப்பது உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து மைனர் பெண்ணின் திருமணத்தைத் தடுத்து நிறுத்தி, பெற்றோரை அதிகாரிகள் எச்சரித்தனர். பின்னர் மைனர் பெண்ணை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
ஆரணி தாலுகாவைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிளஸ்-2 முடித்துள்ளார். இவருக்கும், தஞ்சாவூரை அடுத்த அம்மாப்பேட்டையைச் சேர்ந்த உறவினர் மகனான அருண்குமார் என்பவருக்கும் வரும் 27-ந்தேதி காஞ்சீபுரத்தில் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி குழந்தைகள் நலக் குழும அலுவலர் அம்சா, ஆரணி விரிவு அலுவலர் ருக்மணி, ஊர் நல அலுவலர் ஞானம்மாள் ஆகியோர் சம்பந்தப்பட்ட மைனர் பெண்ணின் வீட்டுக்குச் சென்றனர்.
அங்கிருந்த மைனர் பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பெண்ணுக்கு திருமணம் நடக்கயிருப்பது உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து மைனர் பெண்ணின் திருமணத்தைத் தடுத்து நிறுத்தி, பெற்றோரை அதிகாரிகள் எச்சரித்தனர். பின்னர் மைனர் பெண்ணை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X