search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விருதுநகர் அருகே விபத்தில் வாலிபர் பலி

    விருதுநகர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள வெள்ளூரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 33). இவர் மத்திய சேனையில் இருந்து வெள்ளூருக்கு மோட்டர் சைக்கிளில் வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த இவரது மனைவி விஜி உடனடியாக சிகிச்சைக்காக இவரை விருதுநகர்அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். 

    ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விஜி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×