என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரப்பாக்கம் அருகே கிணற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி
Byமாலை மலர்22 Jan 2021 1:16 AM GMT (Updated: 22 Jan 2021 1:16 AM GMT)
ஊரப்பாக்கம் அருகே கிணற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் (வயது40) , தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் ஊரப்பாக்கம் அருகே உள்ள பெரிய அருங்கால் கிராமத்தில் உள்ள தனது நண்பர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார். பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பிரின்ஸ் அங்கு உள்ள விவசாய கிணற்றில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தார். திடீரென பிரின்ஸ் கிணற்றில் மூழ்கினார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனே மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கும் கூடுவாஞ்சேரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கி இறந்து போன பிரின்சின் உடலை மீட்டனர். அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X