என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலம் வாங்கியதற்கு ரூ.1¼ கோடி போலி வரைவோலை கொடுத்து மோசடி: கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்21 Jan 2021 3:57 PM GMT (Updated: 21 Jan 2021 3:57 PM GMT)
விருதுநகர் அருகே நிலம் வாங்கியதற்கு ரூ.1¼ கோடி போலி வரைவோலை கொடுத்து மோசடி செய்த கணவன்-மனைவி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விருதுநகர்:
ராஜபாளையம் அருகே உள்ள ராம்நகரை சேர்ந்தவர் சவுந்தர ராஜன். இவரது மனைவி பூங்கோதை (வயது47). இவருக்கு சொந்தமான 37 ஏக்கர் 52 சென்ட் நிலம் சேத்தூர் பகுதியில் உள்ளது. இதில் 21 ஏக்கர் 33 சென்ட் நிலத்தை ஈரோட்டை சேர்ந்த நிலதரகர் செல்வின்ராஜ் மூலம் சேலத்தை சேர்ந்த கோகிலா என்பவர் ஏக்கருக்கு ரூ.7 லட்சம் வீதம் விலை பேசி வாங்கி உள்ளார். பத்திரப்பதிவின்போது அரசு வழிகாட்டுதல் மதிப்பீட்டின் படி ரூ.17 லட்சத்து 20 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோகிலாவின் கணவர் ஜெகநாதன் ரூ.1 கோடியே 32 லட்சத்து 11 ஆயிரத்துக்கு அரியானா மாநிலத்தில் உள்ள வங்கி வரைவோலை கொடுத்துள்ளார். இந்த வரைவோலையினை சவுந்தரராஜன், வங்கி கணக்கில் போடுவதற்கு சென்றபோது அந்த வரைவோலை போலியானது என தெரியவந்தது. இதுபற்றி ஜெகந்நாதனிடம் கேட்டபோது அவர் முறையான பதில் அளிக்கவில்லை. மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஈரோட்டை சேர்ந்த நில புரோக்கர் செல்வின் ராஜ், நிலத்தை கிரையம்பெற்ற சேலத்தை சேர்ந்த கோகிலா, அவரது கணவர் ஜெகநாதன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X