என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
Byமாலை மலர்19 Jan 2021 9:36 PM GMT (Updated: 19 Jan 2021 9:36 PM GMT)
கட்டுமான பொருட்கள் விற்பனை தொடர்பாக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுவை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
நீலகிரி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நாடுகாணி சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக கேரளாவில் இருந்து கற்கள், எம்-சான்ட் மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. இதன்படி, மலப்புரம் மாவட்டம் நிலம்பூரை சேர்ந்த பின்ஸ் எலியாஸ் என்பவர் தனக்கு சொந்தமான 18 மினி லாரிகளில் கட்டுமான பொருட்களை கொண்டு வந்து சேரம்பாடி, சேரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு (வயது 50), பின்ஸ் எலியாசிடம் கட்டுமான பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமானால் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பின்ஸ் எலியாஸ் ரூ.20 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய பணத்தை பின்ஸ் எலியாசிடம் கொடுத்தனர். இதையடுத்து அவர் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டரை சந்தித்து ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார்.
அதை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுவை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்த ரசாயன பவுடர் தடவிய பணத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நாடுகாணி சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக கேரளாவில் இருந்து கற்கள், எம்-சான்ட் மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. இதன்படி, மலப்புரம் மாவட்டம் நிலம்பூரை சேர்ந்த பின்ஸ் எலியாஸ் என்பவர் தனக்கு சொந்தமான 18 மினி லாரிகளில் கட்டுமான பொருட்களை கொண்டு வந்து சேரம்பாடி, சேரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு (வயது 50), பின்ஸ் எலியாசிடம் கட்டுமான பொருட்களை விற்பனை செய்ய வேண்டுமானால் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பின்ஸ் எலியாஸ் ரூ.20 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய பணத்தை பின்ஸ் எலியாசிடம் கொடுத்தனர். இதையடுத்து அவர் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டரை சந்தித்து ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார்.
அதை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலுவை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்த ரசாயன பவுடர் தடவிய பணத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X