என் மலர்
செய்திகள்

கைது
விருதுநகர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது
விருதுநகர் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனி (வயது 49). இவர் நேற்று தனது நண்பருடன் அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள இடத்தில் மனை நிலம் பார்ப்பதற்காக சென்றார். அப்போது அல்லம்பட்டி அனுமன் நகரைச் சேர்ந்த அருள்ராஜ் என்ற தாதா (25), எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ஆறுமுக பாண்டி (26) ஆகிய 2 பேரும் சீனியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ. 200 பறித்ததுடன், கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது பற்றிய புகாரின் பேரில் இந்நகர் கிழக்கு போலீசார் மேற்படி இருவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story