search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தந்தை இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை

    தந்தை இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி அண்ணா வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மகன் கோகுலகிருஷ்ணன் (வயது 20). உடல் நலக்குறைவால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாலசுப்பிரமணி இறந்துவிட்டார். தந்தை இறந்த துக்கம் தாங்காமல் கோகுலகிருஷ்ணன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோகுலகிருஷ்ணன் தூக்குப்போட்டு கொண்டார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கோகுலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×