என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்காலில் டாக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் தங்க நகைகள் கொள்ளை
Byமாலை மலர்19 Jan 2021 4:52 AM GMT (Updated: 19 Jan 2021 4:52 AM GMT)
காரைக்காலில் டாக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் நேருநகர் விரிவாக்கத்தில் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் தமிழக பகுதியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்தோடு கடந்த 13-ந்தேதி வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் வெளிக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத் தில் செல்வம் புகார் செய் தார். அதன்பேரில் காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட் தலைமையில் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து டாக்டர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
காரைக்கால் நேருநகர் விரிவாக்கத்தில் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் செல்வம். இவர் தமிழக பகுதியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்தோடு கடந்த 13-ந்தேதி வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் வெளிக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத் தில் செல்வம் புகார் செய் தார். அதன்பேரில் காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட் தலைமையில் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து டாக்டர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X