என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
டி.என்.பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
டி.என்.பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
பங்களாப்புதூர் போலீசார் வாணிப்புத்தூரை அடுத்த மோதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் வட்டமாக அமர்ந்தபடி பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (32), திம்மையன் (51), பாக்யராஜ் (45), கண்ணன் (55), சின்னச்சாமி (65), கிட்டான் (75) ஆகியோர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,000 பறிமுதல் செய்யப்பட் டது.
Next Story






