என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெட்டப்பாக்கம் அருகே தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்18 Jan 2021 5:10 AM GMT (Updated: 18 Jan 2021 5:10 AM GMT)
நெட்டப்பாக்கம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெட்டப்பாக்கம்:
நெட்டப்பாக்கம் அருகே மடுகரை முத்துநகரை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 52). கூலித்தொழிலாளி. இவரது மனைவி விஜயா (44). இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜயா இறந்துவிட்டார். இதையடுத்து மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமலும், மனைவி இறந்த வேதனையிலும் வேலாயுதம் இருந்துவந்தார்.
சம்பவத்தன்று இரவு மனைவியின் நினைவு வரவே, வேதனையில் மது குடித்துவிட்டு வந்து வீட்டின் பின்புறத்தில் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை பார்த்த அவரது மகள்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக வேலாயுதம் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மடுகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X