search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நெட்டப்பாக்கம் அருகே தொழிலாளி தற்கொலை

    நெட்டப்பாக்கம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெட்டப்பாக்கம்:

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரை முத்துநகரை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 52). கூலித்தொழிலாளி. இவரது மனைவி விஜயா (44). இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜயா இறந்துவிட்டார். இதையடுத்து மகள்களை திருமணம் செய்து கொடுக்க முடியாமலும், மனைவி இறந்த வேதனையிலும் வேலாயுதம் இருந்துவந்தார்.

    சம்பவத்தன்று இரவு மனைவியின் நினைவு வரவே, வேதனையில் மது குடித்துவிட்டு வந்து வீட்டின் பின்புறத்தில் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை பார்த்த அவரது மகள்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக வேலாயுதம் உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் மடுகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×