search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கீழ்பென்னாத்தூர் அருகே ஆவின் ஊழியர் மீது தாக்குதல்- கூலித்தொழிலாளி கைது

    கீழ்பென்னாத்தூர் அருகே மெக்கானிக் கடையில் வைத்து ஆவின் ஊழியரை தாக்கிய கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடியில் மோட்டார்சைக்கிள் பழுதுப் பார்க்கும் மெக்கானிக் கடை வைத்திருப்பவர் சுரேஷ் (வயது 39). ஆராஞ்சியைச் சேர்ந்தவர் பெருமாள் (60), ஆவின் பாலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். பெருமாள், பழுதான தனது மொபட்டை பழுது நீக்கம் செய்து தருமாறு சுரேசின் மெக்கானிக் கடையில் விட்டிருந்தார்.

    அப்போது சோமாசிபாடி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான மைக்கேல் என்ற சத்யராஜ் (32) என்பவரும் தனது மோட்டார்சைக்கிளை கொண்டு வந்து சுரேசிடம் கொடுத்து உடனடியாக பழுது நீக்கி தர வேண்டும், எனக் கேட்டுள்ளார். சத்யராஜை சிறிது நேரம் காத்திருக்குமாறு சுரேஷ் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த சத்யராஜ், சுரேசை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி உள்ளார்.

    தகராறை தடுக்க வந்த பெருமாளை, சத்யராஜ் தகாத வார்த்தைகளால் பேசி, கடையில் கிடந்த ஸ்பேனரால் தலையில் தாக்கி உள்ளார். அதில், படுகாயம் அடைந்த பெருமாள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்ந்தார்.

    இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மைக்கேல் என்ற சத்யராஜ் கைது செய்யப்பட்டார்.
    Next Story
    ×