search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஈரோட்டில் தொழில் அதிபர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

    ஈரோட்டில் தொழில் அதிபர் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 50 பவுன் நகையும், ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
    ஈரோடு:

    ஈரோடு சூளை காவிரிநகர் 7-வது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 49). இவர் வீரப்பன்சத்திரம் பகுதியில் துணி பதனிடும் ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காவிரி நகரில் செந்தில்குமார் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார்.

    இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த 13-ந் தேதி இரவு செந்தில்குமார் தனது குடும்பத்துடன் மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூரில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அங்கு பண்டிகையை கொண்டாடிவிட்டு நேற்று காலை செந்தில்குமார் குடும்பத்துடன் வீடு திரும்பினார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 50 பவுன் நகையும், ரூ.50 ஆயிரமும் கொள்ளை போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×