என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் தொழில் அதிபர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்17 Jan 2021 2:47 AM GMT (Updated: 17 Jan 2021 2:47 AM GMT)
ஈரோட்டில் தொழில் அதிபர் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 50 பவுன் நகையும், ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு:
ஈரோடு சூளை காவிரிநகர் 7-வது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 49). இவர் வீரப்பன்சத்திரம் பகுதியில் துணி பதனிடும் ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காவிரி நகரில் செந்தில்குமார் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார்.
இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த 13-ந் தேதி இரவு செந்தில்குமார் தனது குடும்பத்துடன் மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூரில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு பண்டிகையை கொண்டாடிவிட்டு நேற்று காலை செந்தில்குமார் குடும்பத்துடன் வீடு திரும்பினார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 50 பவுன் நகையும், ரூ.50 ஆயிரமும் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு சூளை காவிரிநகர் 7-வது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 49). இவர் வீரப்பன்சத்திரம் பகுதியில் துணி பதனிடும் ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காவிரி நகரில் செந்தில்குமார் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார்.
இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த 13-ந் தேதி இரவு செந்தில்குமார் தனது குடும்பத்துடன் மொடக்குறிச்சி அருகே எழுமாத்தூரில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு பண்டிகையை கொண்டாடிவிட்டு நேற்று காலை செந்தில்குமார் குடும்பத்துடன் வீடு திரும்பினார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 50 பவுன் நகையும், ரூ.50 ஆயிரமும் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X